ETV Bharat / state

அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த 11 ஈரானியர்கள் - போதைப் பொருள் கடத்தலா?

author img

By

Published : Apr 11, 2022, 4:19 PM IST

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 11 ஈரானியர்களுக்கும், போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த ஈரானியர்கள்
அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த ஈரானியர்கள்

சென்னை: இந்திய கடல் எல்லையான அந்தமானை அடுத்த இந்திரா பாயின்ட் பகுதியில் சிறிய ரக கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளதாக, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடலோர பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற கடலோர பாதுகாப்புப் படையினர், அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறிய ரக கப்பலை சுற்றிவளைத்து கப்பலை சோதனையிட்டனர்.

அப்போது அந்த கப்பலில் 11 ஈரானியர்கள் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அடுத்த நாளான சனிக்கிழமை அதிகாலை பிடிபட்ட படகுடன், 11 ஈரானியர்களையும் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு அலுவலர்கள் அழைத்து வந்தனர். முன்னதாக கடலோர பாதுகாப்புப் படையினரால் அளிக்கப்பட்ட தகவலின்பேரில், காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் துப்பாக்கிகளுடன் காத்திருந்தனர்.

பின்னர், கப்பலில் வந்த 11 ஈரானியர்களையும் கடலோர பாதுகாப்புப்படையினர் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் வந்த சிறிய ரக கப்பலை சோதனையிட்டபோது, அதில் குறிப்பிட்ட அளவிலான போதைப்பொருள்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் பிடிபட்ட 11 ஈரானியர்களும் அயப்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த ஈரானியர்கள்

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஈரானியர்களுக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பிருப்பதாக அலுவலர்கள் சந்தேகித்தனர். இந்நிலையில், அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த ஈரானியர்கள் 11 பேரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வேனில் வைத்திருந்த 264 பவுன் நகை திருட்டு

சென்னை: இந்திய கடல் எல்லையான அந்தமானை அடுத்த இந்திரா பாயின்ட் பகுதியில் சிறிய ரக கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளதாக, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடலோர பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற கடலோர பாதுகாப்புப் படையினர், அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறிய ரக கப்பலை சுற்றிவளைத்து கப்பலை சோதனையிட்டனர்.

அப்போது அந்த கப்பலில் 11 ஈரானியர்கள் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அடுத்த நாளான சனிக்கிழமை அதிகாலை பிடிபட்ட படகுடன், 11 ஈரானியர்களையும் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு அலுவலர்கள் அழைத்து வந்தனர். முன்னதாக கடலோர பாதுகாப்புப் படையினரால் அளிக்கப்பட்ட தகவலின்பேரில், காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் துப்பாக்கிகளுடன் காத்திருந்தனர்.

பின்னர், கப்பலில் வந்த 11 ஈரானியர்களையும் கடலோர பாதுகாப்புப்படையினர் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் வந்த சிறிய ரக கப்பலை சோதனையிட்டபோது, அதில் குறிப்பிட்ட அளவிலான போதைப்பொருள்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் பிடிபட்ட 11 ஈரானியர்களும் அயப்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த ஈரானியர்கள்

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஈரானியர்களுக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பிருப்பதாக அலுவலர்கள் சந்தேகித்தனர். இந்நிலையில், அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த ஈரானியர்கள் 11 பேரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வேனில் வைத்திருந்த 264 பவுன் நகை திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.